நண்பகலுக்குப் பின் மீண்டும் சரிந்தது தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இன்று (19) நண்பகல் அளவில் கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி,

22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 13,000 ரூபாவினால் குறைவடைந்த நிலையில் 362,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை 9,000 ரூபாவினால் குறைந்திருந்ததுடன், அந்த நிலை தொடர்ந்தமையால் நண்பகல் வேளையில் மேலும் 4,000 ரூபாவினால் தங்கம் விலை குறைந்துள்ளது.

நேற்று (18) ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 374,400 ரூபாவாகக் காணப்பட்டதுடன், இன்று அது பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, நேற்று 407,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 394,000 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

India iran war
வதந்தி பரப்பியதாக அமீரகத்தில் 19 இந்தியர்கள் கைது: கடும் எச்சரிக்கை
iran
ஹோர்முஸ் நீரிணை: ஈரான் விடுத்துள்ள புதிய எச்சரிக்கை
vehicle import sri lanka
QR முறையினால் வாகன இறக்குமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
qr code
QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகம்!
fuel qr code
எரிபொருள் ஒதுக்கீடு போதாது: விடுக்கப்பட்டுள்ள போராட்ட எச்சரிக்கை!
iran
இந்தியப் பெருங்கடலில் போர்க்கப்பல் மீதான தாக்குதல் - பதிலடிக்கு தயாராகும் ஈரான்