யாழ். நாகர்கோவில் – நாச்சிமார் ஆலய பகுதியில் இருந்து முன்னறிவிப்பின்றி வெளியேறிய இராணுவம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாச்சிமார் ஆலய வளாகத்திலிருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியுள்ளனர்.

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த ஆலயப்பகுதியிலிருந்து, இராணுவத்தினர் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளுமின்றி திடீரென நேற்று (27) வெளியேறியுள்ளனர்.

இராணுவத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, நீண்ட காலத்தின் பின்னர் அப்பகுதிக்குச் சென்ற பக்தர்கள் தற்போது ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும், ஆலயத்திலிருந்து வெளியேறிய இராணுவத்தினர், அங்கிருந்த அனைத்துக் கட்டடங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டுச் சென்றுள்ளதாகப் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

25 ஆண்டுகால ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தாலும், ஆலய வளாகத்திலிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டமை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arrest
இலங்கை வரலாற்றில் முதன்முறை: 1 பில்லியன் டொலர் மோசடி தொடர்பில் வங்கி அதிகாரிகள் கைது!
vavuniya
யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரதம் மோதி வவுனியா இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
Tamil Journalists' Union
இலங்கை ஊடக வரலாற்றில் புதிய சாதனை: 90 ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகள், கைபேசிகள் வழங்கி கெளரவிப்பு!
boat accident
அங்குலான அருகே கடற்படையின் ‘டோரா’ படகு விபத்து: விமானப்படை உதவியுடன் 11 பேர் மீட்பு!
trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!