நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும இரட்டை குடியுரிமை கொண்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு கோரி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் ஒருவரினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்போது, சூரியப்பெரும இலங்கை கடவுச்சீட்டுக்கு மேலதிகமாக அவுஸ்திரேலிய குடியுரிமையை கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அண்மையில் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழியில் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு மத்தியில், செயலாளர் மீதான இந்த இரட்டைப் குடியுரிமை சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இதுவரை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
