நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெருமவிடம் இரட்டைக் குடியுரிமை: சி.ஐ.டி.யில் முறைப்பாடு!

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும இரட்டை குடியுரிமை கொண்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு கோரி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் ஒருவரினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்போது, சூரியப்பெரும இலங்கை கடவுச்சீட்டுக்கு மேலதிகமாக அவுஸ்திரேலிய குடியுரிமையை கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அண்மையில் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழியில் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு மத்தியில், செயலாளர் மீதான இந்த இரட்டைப் குடியுரிமை சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த முறைப்பாடு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இதுவரை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran
ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை துப்பாக்கிச் சூடு!
Suresh Saleh
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்!
iran
தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும்: அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை
suriya movie shoot
கொழும்பில் படமாக்கப்படவிருந்த இந்தியத் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை கலைஞர் திடீரென உயிரிழப்பு!
MT Tifani
இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் ஈரான் ஆதரவு கப்பல் இடைமறிப்பு: அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை!
vavuniya
வவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு: பொலிசார் தீவிர விசாரணை!