வித்யா வழக்கில் உயர்நீதிமன்றத்தின் இறுதி முடிவு வெளியானது!

நாட்டை உலுக்கிய புங்குடுதீவு வித்யா படுகொலை வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(06.05.2026) உறுதி செய்துள்ளது.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த படுகொலை சம்பவம் நாட்டில் பாரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், குற்றவாளிகளாக கண்டறியப்பட்டவர்களுக்கு, முன்னாள் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உள்ளிட்ட மூவரடங்கிய ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது.

இந்தநிலையில், தங்களை விடுவிக்கக் கோரி குற்றவாளிகள் மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இதன்படி, பிரதம நீதிபதி பத்மன சூரசேன தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு குற்றவாளிகளின் மேன்முறையீடுகளை விசாரணை செய்து அவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து இன்று தீர்மானத்தை அறிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

shritharan mp
"செம்மணி மனிதப் புதைகுழி தமிழ் இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி!" நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
buddhist monk arrested
அமெரிக்க பொலிஸாரின் 'ஒப்பரேஷன் ரெட் கார்ட்' அதிரடி: இலங்கை தேரர் உட்பட 7 பேர் கைது!
Sugeeswara Bandara
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஸ்வர பண்டார கைது!
trincomalee
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய நிலத்தடி சிறைக்கு சீல் வைக்கப்படுகிறது!
Kankesanthurai Port
காங்கேசன்துறை துறைமுகத்தில் அதிரடி: ஸ்கேனிங் பரிசோதனையில் அம்பலமான நூதன தங்கம் கடத்தல்!
iran-us
அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 அன்று கையெழுத்தாகிறது!