நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு: ஜூன் 19 இல் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எதிர்வரும் ஜூன் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதற்கமைய, எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெல்லிப்பழை மருத்துவமனையின் புற்று நோய்ப்பிரிவு மருத்துவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியக் குற்றச்சாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட மருத்துவர்கள் இருவருக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

covid 19
மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
Ragitha Rajapaksa
விஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!
jaffna kings
விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!
ramanathan archchuna
அருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு - ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!
archchcuna
கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?
Former IGP C.D
ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!