வெள்ளவத்தையில் கொடூரம்: நண்பர்களுக்கிடையிலான வாக்குவாதம் கொலையில் முடிந்தது!

வெள்ளவத்தையில் இரு நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஒருவர் தடியால் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று இரவு (09) வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் பிரடெரிக் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஒரே வீட்டில் வசித்து வந்த நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து தடியால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 56 வயதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

accident
மன்னார் பறயநாளன் குளம் பகுதியில் அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து: நால்வர் காயம்
gun shoot
கல்கிஸ்சையில் துப்பாக்கி இயங்காததால் நூலிழையில் உயிர்தப்பிய நபர்!
Ravindra Wijegunaratne
11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு: முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுதலை!
jaffna
சமகால அரசியல் மற்றும் செம்மணி புதைகுழி தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களுடன் தமிழ் பிரதிநிதிகள் கலந்துரையாடல்
chemmani protest
செம்மணி புதைகுழியை பார்வையிட வந்த ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக்குழு!
suresh saleh
சுரேஷ் சலேவின் ரிட் மனு: மேலதிக பரிசீலனை ஜூலை 27-க்கு ஒத்திவைப்பு!