வெள்ளவத்தையில் கொடூரம்: நண்பர்களுக்கிடையிலான வாக்குவாதம் கொலையில் முடிந்தது!

வெள்ளவத்தையில் இரு நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஒருவர் தடியால் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று இரவு (09) வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் பிரடெரிக் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஒரே வீட்டில் வசித்து வந்த நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து தடியால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 56 வயதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!