அமெரிக்காவுக்கும் – ஈரானுக்கும் இடையே சுவிட்சர்லாந்தில் இன்று (19) இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
குறித்த பேச்சுவார்த்தை பர்கன்ஸ்டாக் மலை உச்சியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தெஹ்ரானுக்கும், வொஷிங்டனுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று ஆரம்பமாகவிருந்தது.
சுவிட்சர்லாந்தில் ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்த பயணத்திலிருந்து அமெரிக்கத் உப ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் பின்வாங்கியுள்ளதாக வௌ்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் நேற்றிரவு தெரிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
