கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், இந்திய சாட்சிகள் இருவருக்கு அழைப்பாணை அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நீதிச் சேவை ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய, வெளிநாட்டுச் சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பும் நடைமுறையின்படி இந்த நடவடிக்கையை எடுக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த இரு சாட்சிகளையும் தொடர்புகொள்ள முடியவில்லை எனக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்துருகொடவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
