கட்டாய உழைப்பை முறையாகத் தடுக்கத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், இலங்கை உட்பட்ட சுமார் 60 வர்த்தகப் பங்காளிகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா புதிய வரிகளை விதிக்கிறது.
இந்த வரி விதிப்பு இன்று (24) முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்தநிலையில் புதிய வரி விதிப்பின் அடிப்படையில் இலங்கைக்கு 10வீத வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற பின்னர், ஏற்படுத்திய வர்த்தகப் போரில், இந்த அண்மைக்கால முக்கிய நடவடிக்கையாகும்.
அவசரகால அதிகாரங்களின் கீழ் உலகளவில் விதிக்கப்பட்ட பல வரிகள் சட்டவிரோதமாக இயற்றப்பட்டவை என்று அண்மையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, அமெரிக்க உற்பத்தித் துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், அமெரிக்கப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் ட்ரம்ப் வரிகளைப் பயன்படுத்தியுள்ளார்.
எனினும் தொழிலாளர் விதிகள் போன்ற வர்த்தகம் சாராத பிரச்சினைகளில் மெக்சிக்கோ போன்ற பிற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கவும் அவர் அவற்றைப் பயன்படுத்தியுள்ளார்.
அண்மைய நாட்களில் வெள்ளை மாளிகை கனடாவின் இறக்குமதிகளைக் குறிப்பாக வடக்கு எல்லையைக் கடக்கும் பொருட்களுக்கு 50வீத வரி விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இறக்குமதி செய்யும் நிறுவனங்களே வரிகளைச் செலுத்துவதால், அந்த வணிகங்கள் பெரும்பாலும் கூடுதல் செலவுகளை அதிக விலைகள் மூலம் வாடிக்கையாளர்கள் மீது சுமத்துகின்றன.
அமெரிக்கத் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும், நியாயமான போட்டியை உறுதி செய்யவும் இந்த வரிகள் தேவை என்று வெள்ளை மாளிகை வலியுறுத்துகிறது.
