நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காணாமல் போன பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட மற்றும் பலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர் நீதிமன்றம் பரிசீலித்த பின்னர், இன்று (10.09.2026) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு 2018ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதை அடுத்து, ஞானசார தேரர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை நிலைநிறுத்த முடியாது என்று உயர் நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.
