2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னணியில், நாடாளுமன்றத்தின் முதல் இரண்டு வரிசைகளில் அமர்ந்திருக்கும் சில மூத்த அமைச்சர்கள் இருக்கலாம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச இன்று (10) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்களுக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய தொகையைத் தவறான வங்கிக் கணக்கிற்கு மாற்ற முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.
நிலக்கரி கொள்முதலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பியதுடன், அந்த விநியோகப் பணிகள் எவ்வாறு இவ்வளவு விரைவாக நிறைவு செய்யப்பட்டன என்றும் வினவினார்.
இதேவேளை தங்களுடைய பேரணியை நடத்துவதற்காகக் கோரப்பட்ட மைதானத்தைப் பயன்படுத்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் அடக்குமுறைகளால் எங்கள் போராட்டத்தை முடக்க முடியாது என்று நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
