யோஷித ராஜபக்ச மற்றும் வசந்த கரண்ணாகொடவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரண்ணாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

முறையான கல்வித்தகுதிகள் இன்றி யோஷித ராஜபக்சவை கடற்படையில் சேர்த்தல் மற்றும் அவருக்கு பிரிட்டிஷ் அரச இராணுவ கல்லுரியில் பயிற்சி அளித்தல் ஆகியவற்றின் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தி, யோஷித ராஜபக்சவிற்குப் பயனளித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் வசந்த குமார ஜெயதேவ கரண்ணாகொட முதல் பிரதிவாதியாகவும், யோஷித கனிஷ்க ராஜபக்ச இரண்டாவது பிரதிவாதியாகவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கிற்காக 25 சாட்சிகளின் பெயர்களையும், 47 ஆதார ஆவணங்களின் பட்டியலையும் இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!