35 வருட சேவைக்குப் பின் கிடைத்த தண்டனை:மரண தண்டனைக்குப் பின் பூஜித் ஜயசுந்தர வெளியிட்ட சோக வாக்குமூலம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக நேற்று (31.07.2026)முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த வழக்கில் பூஜித் ஜயசுந்தர சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரோஷன் தெஹிவள மற்றும் பூஜித் ஜயசுந்தர தெரிவித்த கருத்துக்கள் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பூஜித் ஜயசுந்தர வாடகை வீட்டிலே மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.

35 வருடங்கள் பொலிஸ் சேவையில் பணியாற்றியதோடு இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

290 வழக்குகளில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளுக்காக பல இலட்சம் ரூபாய்களை அவர் நஷ்ட ஈடாகச் செலுத்தியுள்ளார் என்று சட்டத்தரணி ரோஷன் தெஹிவள சுட்டிக்காட்டினார்.

பூஜித் ஜயசுந்தர சோகத்துடனும் விரக்தியுடனும் உரையாற்றிபோது,

“ நான் ஒருபோதும் எந்தவொரு மனிதனையும் கொன்றதில்லை. மனிதர்களைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு எழுந்ததில்லை.

நான் நம்பும் மதத்தின் நம்பிக்கைகளின்படி இது எனது பூர்வ ஜென்ம கர்ம காரணமாகவே நிகழ்ந்தது. நான் பொலிஸ் சேவையில் இணைந்த நாள் முதல் பொதுமக்களுக்காகவும் பொலிஸ் திணைக்களத்திற்காகவுமே அர்ப்பணித்து சேவையாற்றினேன்.

இந்தச் சம்பவத்துடன் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தேன். பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து என்னைச் சட்டப்பூர்வமாக நீக்கவில்லை.

அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்கு நான்கு ஆண்டுகள் எடுத்ததாகவும் கூறினார். இறுதியில் சட்டத்தரணியின் ஆலோசனையின் பேரில் வழக்கை விலக்கிக் கொண்டதாக குறிப்பிட்டார்.

இதனால் தான் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் FR (அடிப்படை உரிமை) வழக்குகளுக்கு அமைவாக நஷ்டஈடு செலுத்த வேண்டியிருந்தது. பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

எக்காலத்திலும் எவருக்கும் எந்தவொரு தவறையும் செய்யாத தனக்கு, இவ்வாறு நேர்ந்துள்ளதாகவும் தனது வயதையும் தற்போதைய ஆதரவற்ற நிலையையும் கருத்தில் கொண்டு பொருத்தமான தீர்ப்பை வழங்குமாறும் அவர் மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

srilanka weather
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி: 6-ஆம் திகதிக்குப் பின் மீண்டும் கனமழை எச்சரிக்கை!
gotabaya rajapaksa
கோட்டாபயவின் மனு பரிசீலனை நிறைவு: தீர்ப்பு செப்டெம்பர் 22-க்கு ஒத்திவைப்பு!
electricity bill
மின் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
mahaweli river
அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை: பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு!
Mahara Prison
போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம்? மஹர சிறைச்சாலையில் ரூ.15 கோடி சேதம் — அதிர்ச்சி தகவல்கள்!
Pujith Jayasundara
"அரசியல்வாதிகளை நம்பினால் பூஜித்திற்கு நடந்ததே நடக்கும்": பொலிஸ் உயர்மட்ட 'வாட்ஸ்அப்' உரையாடலில் வெளிவந்த தகவல்!