யோஷித ராஜபக்ச மற்றும் வசந்த கரண்ணாகொடவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரண்ணாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

முறையான கல்வித்தகுதிகள் இன்றி யோஷித ராஜபக்சவை கடற்படையில் சேர்த்தல் மற்றும் அவருக்கு பிரிட்டிஷ் அரச இராணுவ கல்லுரியில் பயிற்சி அளித்தல் ஆகியவற்றின் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தி, யோஷித ராஜபக்சவிற்குப் பயனளித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் வசந்த குமார ஜெயதேவ கரண்ணாகொட முதல் பிரதிவாதியாகவும், யோஷித கனிஷ்க ராஜபக்ச இரண்டாவது பிரதிவாதியாகவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கிற்காக 25 சாட்சிகளின் பெயர்களையும், 47 ஆதார ஆவணங்களின் பட்டியலையும் இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

srilanka weather
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி: 6-ஆம் திகதிக்குப் பின் மீண்டும் கனமழை எச்சரிக்கை!
gotabaya rajapaksa
கோட்டாபயவின் மனு பரிசீலனை நிறைவு: தீர்ப்பு செப்டெம்பர் 22-க்கு ஒத்திவைப்பு!
electricity bill
மின் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
mahaweli river
அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை: பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு!
Mahara Prison
போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம்? மஹர சிறைச்சாலையில் ரூ.15 கோடி சேதம் — அதிர்ச்சி தகவல்கள்!
Pujith Jayasundara
"அரசியல்வாதிகளை நம்பினால் பூஜித்திற்கு நடந்ததே நடக்கும்": பொலிஸ் உயர்மட்ட 'வாட்ஸ்அப்' உரையாடலில் வெளிவந்த தகவல்!