யாழ். சுன்னாகத்தில் சோகம்: சிம் அட்டை விவகாரத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட வாலிபன்!

யாழில், சிம் தொடர்பான பிரச்சனை ஒன்றினால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த சம்பவமானது இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

தாயாரின் அடையாள அட்டையில் சிம் அட்டை ஒன்றினை வாங்கி தருமாறு குறித்த இளைஞன் கோரிய நிலையில் அது முரண்பாடாக மாறியது.

பின்னர் குறித்த இளைஞன் தனக்கு தானே மண்ணெண்ணெயை உற்றிவிட்டு வயல் கிணற்றுக்கு அருகே சென்று தீ மூட்டியுள்ளார். அதன்பின்னர் வயலுக்குள் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.

இந்நிலையில் அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Namal and Mahinda
"18ஆவது திருத்தம் நாங்கள் செய்த தவறு; அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம்!" - நாமல் ராஜபக்ச
police arrest
தெஹிவளை உணவகக் கொள்ளை: முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்குக் கடூழிய சிறை!
negombo prison
தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: நீர்கொழும்பு சிறை அதிகாரி சாட்சியத்தை வெளியிட நீதிமன்றம் தடை!
telegram
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
accident
A9 வீதியில் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி: இரு இளைஞர்களின் உயிரைப் பறித்த சோகம்!
pillayan
'பிள்ளையான்' தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு: விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு!