தற்போதைய அரசாங்கம் காழ்ப்புணர்ச்சியுடன் செயற்படுகிறது: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சாடல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது முற்றிலும் அநியாயமானது எனவும், அதுவொரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர், சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றிற்கு பிறகு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அரசியல் ரீதியான காழ்ப்புணர்வுகளுடன் செயற்படுவதாகவும், இதன் ஒரு கட்டமாகவே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் இடம்பெறும் இவ்வாறான பழிவாங்கல் அரசியல் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த அவர், சட்டத்தின் ஆட்சியைப் பலவீனப்படுத்தும் வகையிலான இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராக உரிய ஜனநாயக வழிகளில் குரல் கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!