ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ரேணுக பெரேரா, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகளை இயக்குவதற்காக 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை
சட்டவிரோதமாக வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராக அவர் பதவி வகித்த காலத்தில் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
