🔴 VIDEO மாம்பழத்தை பல இலட்சம் கொடுத்து வாங்கிய பிரான்ஸில் இருந்து வந்த பக்தர்!

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில், திருவிழா நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாம்பழத் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) சிறப்பாக நடைபெற்றது.

இந்த எட்டாம் திருவிழாவின் இறுதியில், ஆலய நிர்வாக சபையினரால் மாம்பழம் ஏலத்திற்கு விடப்பட்டது. இதனையடுத்து, பிரான்ஸில் இருந்து வந்த பக்தர் ஒருவர், மாம்பழத்தை ரூபாய் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் (Rs. 4,60,000) செலுத்தி ஏலத்தில் பெற்றுக் கொண்டார். இது அந்த திருவிழாவின் முக்கிய அம்சமாகும்.

மேலும், தேர்த்திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) நடைபெறவுள்ளதோடு, அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை (ஜூன் 9) தீர்த்தத் திருவிழா நடைபெறவுள்ளது என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (2)
தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
New Project t (1)
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தகவல்கள்: சி.ஐ.டியில் முறைப்பாடு!
New Project t
நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
varalakshmi-poojai
வரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?
vavuniya-thump
அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் சாதனை: அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கும் தெரிவு
New Project t (3)
இலங்கையிலுள்ள சீனர்களுக்கு சீனத் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!