🔴 VIDEO மாம்பழத்தை பல இலட்சம் கொடுத்து வாங்கிய பிரான்ஸில் இருந்து வந்த பக்தர்!

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில், திருவிழா நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாம்பழத் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) சிறப்பாக நடைபெற்றது.

இந்த எட்டாம் திருவிழாவின் இறுதியில், ஆலய நிர்வாக சபையினரால் மாம்பழம் ஏலத்திற்கு விடப்பட்டது. இதனையடுத்து, பிரான்ஸில் இருந்து வந்த பக்தர் ஒருவர், மாம்பழத்தை ரூபாய் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் (Rs. 4,60,000) செலுத்தி ஏலத்தில் பெற்றுக் கொண்டார். இது அந்த திருவிழாவின் முக்கிய அம்சமாகும்.

மேலும், தேர்த்திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) நடைபெறவுள்ளதோடு, அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை (ஜூன் 9) தீர்த்தத் திருவிழா நடைபெறவுள்ளது என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jFFANA
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
image
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!
CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்