மிளகாய் தூள் பூசப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம்: இலங்கையில் நடந்த பயங்கரம்

மினுவாங்கொட, யட்டியான பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மினுவாங்கொட பொலிஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மினுவாங்கொட, யட்டியான பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த பெண்ணின் உடலில் மிளகாய் தூள் பூசப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும், மரணம் நடந்த விதம் குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

பிரேத பரிசோதனைக்காக சடலம் கம்பஹா மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மினுவாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

mano
"மலையகத் தமிழர்களுக்கு காணி இல்லையேல் வட, கிழக்கில் குடியேற்றம்" - மனோ கணேசன்
weather update
விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்
flood
நிவாரணப் பணிகளின் போது அரசியல் அழுத்தம்: எழுந்துள்ள குற்றச்சாட்டு!
japan
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை
Ambitiya Thero
அம்பிட்டிய தேரர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
crime
கணவனை தாக்கி கொலை செய்த மனைவி!