உலகையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து! முதற்கட்ட அறிக்கையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி அகமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து குறித்த 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (12) வெளியாகியுள்ளது.

அதன்படி, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணை பணியகம் ஒரு அறிக்கையைத் தயார் செய்து வெளியிட்டு உள்ளது.

விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு இயந்திரங்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் இயந்திரங்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இதனால் விமானம் மேல் எழும்ப முடியாமல் விழுந்து நொறுங்கியுள்ளது.

இதற்கிடையே, அறிக்கையில் விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே 2 விமானிகள் பேசிக்கொண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் ”எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள்” எனக் கேட்டுள்ளார். அதற்கு, தான் அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதிலளித்திருப்பதும் விசாரணை அறிக்கையில் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட அறிக்கை வெளியான நிலையில் விசாரணை தொடரும் எனவும் முழுமையான அறிக்கை வெளிவர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்றும் விமான விபத்து குறித்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Nainadhivu Sri Nagapoosani Amman Temple 5
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தீர்த்த திருவிழா.
Chamber-House-of-Commons-Houses-Parliament-London
வெளிநாட்டு ஒன்றின் நாடாளுமன்றில் செம்மணிக்காக ஒலித்த குரல்!
New Project t
நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்து விடுதி உரிமையார்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்!
17519568840
கிளிநொச்சியில் துப்பாக்கிச்சூடு! வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடிய சாரதி!
1736670096-Vehicle-Import-L
புதிய வரி விதிப்பிற்கு பின்னர் வெளியான வாகனங்களின் விலை நிலவரம்!
43e6079f-0c64-49a6-a859-de7fe7f5ad5e
யாழில் நடந்த துயரம் !முன்னணி பாடசாலையின் உயர்தர மாணவி பரிதாபமாக உயிரிழப்பு!