இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேறுவதற்கு தூதரகம் உதவாது என அறிவிப்பு!

இஸ்ரேலில் நிலவும் மோசமான பாதுகாப்புச் சூழலைக் கருத்திற்கொண்டு, அங்குள்ள தனது நாட்டுப் பிரஜைகளை வெளியேற்றுவதற்குத் தம்மால் உதவ முடியாது என அமெரிக்கத் தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் அமெரிக்கப் பிரஜைகளை இஸ்ரேலிலிருந்து வெளியேற்றவோ அல்லது நேரடியாக உதவவோ முடியாத நிலையில் உள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் டெல் அவிவ் கிளை அலுவலகம் ஆகியவை இன்று (செவ்வாய்க்கிழமை) மூடப்பட்டுள்ளன.

பென் குரியன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், வணிக ரீதியான விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தூதரகம் நேரடியாக உதவவில்லை என்றாலும், இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்புவோருக்கு மாற்று வழிகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.

இஸ்ரேலிய சுற்றுலா அமைச்சகம் எகிப்தின் தாபா எல்லை நோக்கிச் செல்லும் விசேட பேருந்து சேவைகளை இயக்கி வருகிறது.

இந்தப் பேருந்துகளைப் பயன்படுத்த விரும்புவோர் இஸ்ரேலிய சுற்றுலா அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ‘வெளியேற்ற படிவத்தை’ இணையத்தளம் ஊடாகப் பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும்.

“இந்தச் சேவையைப் பயன்படுத்தி வெளியேற விரும்புவோரின் பாதுகாப்பிற்கு அமெரிக்க அரசாங்கம் உத்தரவாதம் அளிக்காது, இது ஒரு தகவலாக மட்டுமே வழங்கப்படுகிறது” என தூதரகம் எச்சரித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
கிளிநொச்சியில் இளம் கலைஞர் கைது: அரசின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடும் நாமல் ராஜபக்ஷ!
vavuniya
மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்: வவுனியா 'சிறுவர் பாதாளக் குழு' சிக்கியது! 7 பேருக்கு நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு!
arrest
எழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது!
vavuniya accident
கனகராயன் குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!
chennai srilankan girl death
சென்னை கோயம்பேடு கொடூரம்: காரில் மோதி இலங்கை பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுமியும் பலி
gotabaya rajapaksa
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை