இலங்கையில் கடமையின்போது உயிரிழந்த மற்றுமொரு அதிகாரி!

குருணாகல் பகுதியில் நேற்று இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்பவியலாளர் ஒருவர் கடமையின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

பொவத்த – வீரபொக்குண வீதியில் சேதமடைந்த குறைந்த மின்னழுத்த மின் இணைப்பைப் பழுதுபார்க்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம்
நேர்ந்துள்ளது.

மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்ட 41 வயதுடைய குறித்த நபர், வீரபொக்குண ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தின் பின்னர் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தம்புள்ளையில் தற்காலிக ஊழியராக 2007 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கிய இவர், 2017 ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபையின் நிரந்தரப் பணியாளரானார்.

அண்மையில் ஹெட்டிப்பொல உப மின் நிலையத்துடன் இணைக்கப்பட்ட இவர், அர்ப்பணிப்புடன் கடமையாற்றி ஒருவரென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு