தேசிய மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளியில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் !

கொழும்பு தேசிய மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளியில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த ஆயுதங்கள் மருத்துவமனையின் ஊழியர் ஒருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது.

108 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மருத்துவமனையின் வாகனத் தரிப்பிடத்தை துறைசார் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போதே, குறித்த உந்துருளியில் இருந்து, 5 – T56 ரக துப்பாக்கி ரவைகள் மற்றும் 9 மில்லிமீற்றர் தோட்டாக்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த ஆயுதங்கள் வெளி நபர்களால் கடத்தப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதா? அல்லது அவை மருத்துவமனையின் ஊழியருக்குச் சம்பந்தப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

night sky
இலங்கையின் வான்பரப்பில் இன்று ஏற்படவுள்ள அதிசயம்!
ishara sewwandi
செவ்வந்தியின் வங்கிக் கணக்கு குறித்து வெளியான தகவல்!
arrest
30 கோடி ரூபாய் பெறுமதியான பொக்கிஷங்கள் மீட்பு!சந்தேக நபர் கைது
gold price today
ஒரே நாளில் சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை!
afghanistan cricket player
வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி!
ishara sewwandi
இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது!