யாழ், நெடுந்தீவு கடற்பகுதியில் 27 மில்லியன் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் கைது.

மன்னார், வான்கலை மற்றும் யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் 27 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போதே போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் 121 கிலோ கிராம் நிறையுடைய கேரள கஞ்சா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கைதானவர்கள் 19 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு டிங்கி படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இரண்டு டிங்கி படகுகள், கேரள கஞ்சா மற்றும் சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக நெடுந்தீவு மற்றும் வங்காலை பொலிஸ் நிலையங்களில் ஒப்படை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுசெல்லப்படும் பொருட்கள்: கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
namal
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நாமல் கோரிக்கை
weather
சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
rain
நாளை முதல் தீவிரமடையும் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்
flood
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
lightning
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!