யாழ்ப்பாணம்- கீரிமலைப் பகுதியில் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெடிகுண்டு கீரிமலை – புது கொலணி பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து நேற்று(9) மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் வெடி குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது.
இந்தநிலையில், தெல்லிப்பழை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த வெடிகுண்டை பாதுகாப்பாக மீட்டு சென்றுள்ளனர்.