சுவிட்சர்லாந்தில் தீப்பற்றி எரிந்த பேருந்து: 6 பேர் உடல் கருகி பலி

மேற்கு சுவிட்சர்லாந்தின் பெர்ன் (Bern) நகருக்கு அருகில் பயணிகள் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்று (10) மாலை பெர்ன் நகரிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃப்ரிபோர்க் (Fribourg) மாகாணத்தின் கெர்சர்ஸ் (Kerzers) மையப்பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டுடிங்கன் (Düdingen) நகராட்சியிலிருந்து புறப்பட்ட இந்தப் பேருந்து, கெர்சர்ஸ் பகுதியை நெருங்கியபோது திடீரென தீப்பிடித்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த நிலையில் மூவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் மீட்பு நடவடிக்கையின் போது, மீட்புப் பணியாளர் ஒருவரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இது தற்செயலாக நடந்த விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா என்ற கோணத்தில் விசாரணைகள் நடக்கின்றன.

பேருந்திலிருந்த நபர் ஒருவர் பெட்ரோலைத் தன் மீது ஊற்றிக் கொண்டதாக முதற்கட்டத் தகவல்கள் கசிந்துள்ளன. எனினும், இதனை அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!