திருகோணமலையில் வீடியோ ஆதாரத்தால் சிக்கிய பொலிஸ்: பணி இடைநீக்கம்!

திருகோணமலை, மூதூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் சாரதியிடம் 1,000 ரூபாய் இலஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்புக் கவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தாமை மற்றும் இலஞ்சம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய குறித்த அதிகாரியை பணியில் இருந்து இடை நிறுத்துவதற்கு திருகோணமலை பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி இரவு நடமாடும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த கான்ஸ்டபிள் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதன்போது கையடக்க தொலைபேசியினால் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்றை பாதிக்கப்பட்ட நபர் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைக்கு அமைவாகவே குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சந்தேக நபருக்கு எதிராக மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Homagama
ஹோமாகம ஹெல்மெட் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு; பலர் மீட்க நடவடிக்கை!
jaffna
தங்கத்துரை, குட்டிமணி உருவச்சிலை திறப்பு விழா: ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு!
vavuniya accident
கொழும்பில் இருந்து வவுனியா சென்ற சொகுசு பேருந்து விபத்து: சாரதி படுகாயம்!
Avengers Doomsday Trailer
Avengers Doomsday Trailer Release: Doctor Doom ஆக மிரட்டும் Robert Downey Jr!
iran
ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய எண்ணெய் கப்பல்கள்: 9-வது நாளாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்!
Esmail Baghaei
அமெரிக்கா - ஈரான் தொடர்புகள் துண்டிக்கப்படவில்லை: மத்தியஸ்தர்கள் மூலம் தீவிரமடையும் பேச்சுவார்த்தை