முன்னாள் பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளரின் மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது: கார்டினல் ரஞ்சித் ஆண்டகை

கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வித் தொகுப்பின் 2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு பேராயர் மேல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான கடமைகளைத் தவறவிட்ட குற்றச்சாட்டில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்த தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

மரண தண்டனையானது மனித கண்ணியத்தை மீறுவதாகவும், திருச்சபையின் போதனைகளின்படி எந்தவொரு மரண தண்டனையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கார்டினல் ஆண்டகை சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், இலங்கை நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மை மீது தாம் முழு நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதன் தீர்மானங்களிலோ அல்லது விவாதங்களிலோ எந்த வகையிலும் தலையிட உத்தேசிக்கவில்லை என்றும் கொழும்பு பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் விவாதச் சூழலில், கொழும்பு பேராயர் இல்லம் இத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுடன் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறது.

இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரி அல்லது சூத்திரதாரிகள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் வெளிக்கொணர்வதும், நாட்டின் சட்டத்திற்கு அமைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதும் கொழும்பு பேராயர் இல்லத்தின் தீவிர எதிர்பார்ப்பாகும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
அராலியில் நள்ளிரவில் துணிகரக் கொள்ளை: மின்சாரத் தடையைப் பயன்படுத்தி தங்க நகைகள் கொள்ளை!
Tran Alus
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து: டிரான் அலஸ் மீது விடுக்கப்பட்டுள்ள பாரிய ஊழல் குற்றச்சாட்டு
Akila Viraj Kariyawasam
கைது செய்யப்பட்ட அகில விராஜ் ஆகஸ்ட் 18 வரை விளக்கமறியல்!
Akila Viraj Kariyawasam
ஜனாதிபதி செயலக ஊழியர் நியமன முறைக்கேடு: முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!
Kaduwela bus  attack
கடுவெலையில் சொகுசுப் பேருந்துக்குத் தீவைத்த மர்ம நபர்கள்: ஓட்டுநர், நடத்துனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
Nirojan Kulasingam
சமையல் உலகின் 'ஆஸ்கார்' பட்டியலில் முதல் ஈழத்தமிழர்: பாரிஸில் நிரோஜன் குலசிங்கம் மகுடம்!