உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பேராயருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததாகக் கூறப்படும் செய்திகளை நிராகரித்தது கொழும்பு பேராயர் இல்லம்!

கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து, கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை கொழும்பு பேராயர் இல்லம் முற்றாக நிராகரித்துள்ளது.

இதுதொடர்பில் கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என சுட்டிக்காட்டியுள்ள அருட்தந்தை சிறில் காமினி, இவ்வாறான போலியான குற்றச்சாட்டுகள் கடந்த 2020ஆம் ஆண்டிலும் சுமத்தப்பட்டு, அப்போதே பேராயர் இல்லத்தினால் அவை உத்தியோகபூர்வமாக மறுக்கப்பட்டிருந்தன என்றும் நினைவுபடுத்தியுள்ளார்.

தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முன்னர், பாதுகாப்புப் பிரிவினரோ அல்லது உளவு அமைப்புகளோ அதுகுறித்த எந்தவொரு முன்கூட்டிய உளவுத்துறை தகவல்களையும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் பேராயர் இல்லம் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, சமூக ஊடகங்களில் உத்தியோகபூர்வ ஆதாரங்களின்றி பரப்பப்பட்டு வரும் இவ்வாறான உண்மைக்கு புறம்பான மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களை பொதுமக்கள் மேலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என கொழும்பு பேராயர் இல்லம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minister Nalinda Jayatissa
போராட்டங்களால் CID விசாரணைகளைத் தடுக்க முடியாது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
சுரேஷ் சலே
தீவிரம் அடையும் சுரேஷ் சலே விசாரணை: CID அதிகாரிகளை நேரில் முன்னிலையாக மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
kilinochchi
முறையற்ற மின் இணைப்பு உயிரைப் பறித்தது: கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் பலி!
court judgement
வங்கி கடனுக்காக மகனுக்கு மாற்றப்பட்ட வீடு: 30 வருடங்களின் பின் தாய்க்கு கிடைத்த நீதி!
sarana gunawardena
சரத் குணவர்தனவுக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறை; கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
weather
மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!