யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவ, கல்கண்டேகம பகுதியில் இன்று (17) புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பூநாவ பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் நுரைச்சோலை பகுதியை சேர்ந்த 35 மற்றும் 43 வயதுடைய இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனாவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றது.
