அமெரிக்கா – ரஷ்யா இடையே மோதல்: கியூபாவை மையப்படுத்தி வலுக்கும் சர்வதேச பதற்றம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கியூபா தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், அந்நாட்டை அமெரிக்கா ஒரு “நட்பு ரீதியிலான கையகப்படுத்துதல்” (Friendly Takeover) மூலம் தன்வசப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

கியூபா ஒரு பலவீனமான நாடாக மாறிவிட்டதாகவும், அந்நாட்டை விடுவிப்பது அல்லது கையகப்படுத்துவது குறித்து தம்மால் எதையும் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, ஜனாதிபதி டிரம்பின் இந்த பேச்சுக்களை “பிளாக்மெயில்” மற்றும் மிரட்டல் என்று விமர்சித்துள்ளார்.

கியூபா ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும், அதன் சுதந்திரத்திற்கு ரஷ்யா எப்போதும் துணை நிற்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் இத்தகைய அழுத்தங்களுக்கு எதிராக கியூபாவிற்கு தேவையான அனைத்து அரசியல் மற்றும் ராஜதந்திர ஆதரவையும் வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கியூபாவில் நிலவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரத் தடைக்கு அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளே காரணம் என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

அதே நேரத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கியூபா விவகாரத்தை கவனித்து வருவதாகவும், அந்த அரசு விரைவில் வீழும் என்றும் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்து வருகிறது.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே சர்வதேச அளவில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.த்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே சர்வதேச அளவில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழில் வீதியில் விழுந்து கிடந்த நகையை எடுத்து உரியவரிடம் சேர்ப்பித்த பார்த்தீபன்!
archuna ramanathan
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாடு: விளக்கமறியலில் இருந்த பெண்ணுக்கு பிணை!
trump
தங்க கையெழுத்து… ட்ரம்ப்பின் முகம்… அமெரிக்க கடவுச்சீட்டில் அதிரடி மாற்றம்?
archuna ramanathan
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிணை!
jaffna
யாழ். நாகர்கோவில் - நாச்சிமார் ஆலய பகுதியில் இருந்து முன்னறிவிப்பின்றி வெளியேறிய இராணுவம்!
trincomalee
சர்ச்சைக்குரிய திருகோணமலை விகாரை வழக்கு: விசாரணைகள் முடிவுக்கு வந்தன