காங்கேசன்துறை – கற்பிட்டி கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம்

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கனமழை, பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்த ‘சிவப்பு எச்சரிக்கை’விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள இந்த அவசர எச்சரிக்கை அறிவித்தல், நாளை (12) காலை 10.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய கடல் வலயங்கள் உள்ளிட்ட பல கடலோரப் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், 2.5 மீற்றர் உயரம் வரை அலைகள் எழும்பி கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, கடற்சார் நடவடிக்கைகளின் போது கடற்படையினரும் கடற்றொழிலாளர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
கிளிநொச்சியில் இளம் கலைஞர் கைது: அரசின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடும் நாமல் ராஜபக்ஷ!
vavuniya
மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்: வவுனியா 'சிறுவர் பாதாளக் குழு' சிக்கியது! 7 பேருக்கு நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு!
arrest
எழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது!
vavuniya accident
கனகராயன் குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!
chennai srilankan girl death
சென்னை கோயம்பேடு கொடூரம்: காரில் மோதி இலங்கை பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுமியும் பலி
gotabaya rajapaksa
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை