போதைப்பொருள் விவகாரம் : NPP உறுப்பினர் பதவி விலகல்

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் சுமார் 2 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை அதிபர் மற்றும் அவருடைய மகன் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர் டிஸ்னா நிரஞ்சலா குமாரி பதவி விலகியுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவர் மீது தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பேலியகொட நகர சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முழு கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் தனிப்பட்ட ரீதியில் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், சட்ட நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கும், நாட்டில் ஒரு நல்ல அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க தேசிய மக்கள் சக்தியால் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கும் அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கம்பஹா மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதன் நகல் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

gun shoot
இரத்தினபுரி - கலவான பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
trump
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரில் இந்தியாவில் வாக்காளர் அட்டை!
srilanka
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம்!
mannar
மன்னாரில் கத்தோலிக்க குருவின் உடையில் வந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த கதி!
anura
போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்: ஜனாதிபதி வலியுறுத்தல்
pugi
யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிர்மாய்ப்பு!