2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்தவர்களையும், தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களையும் நினைவுகூரும் “வீர வணக்க நிகழ்வு” நேற்று (30.08.2026) இங்கிலாந்தின் ரீடிங் பகுதியில் நடைபெற்றது.
தமிழீழ மண்ணுக்காக உயிர்நீத்தவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெருமளவான தமிழ் மக்கள் கலந்து கொண்டு தங்களது அஞ்சலியை உணர்வுபூர்வமாக செலுத்தினர்.





நிகழ்வில் மலர் தூவி, தீபமேற்றி, நினைவுச் சுடர் ஏற்றி, மலர் மாலைகள் அணிவித்து உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்ததுடன், அவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மேலும், அவர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மாவீரர்களின் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் போற்றும் வகையில், அவர்களை மிகுந்த மரியாதையுடனும் உணர்வுபூர்வமாகவும் கௌரவித்த இந்த நிகழ்வு, பங்கேற்றவர்களின் மத்தியில் ஆழ்ந்த உணர்வை ஏற்படுத்தியது.
மாணவர்களாக இருந்து உயிரிழந்தவர்களையும் நினைவுகூரும் வகையில் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதுடன், அவர்களின் நினைவுகளையும் தியாகங்களையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில் நிகழ்வுகள் அமைந்திருந்தது.
மாவீரர் பணிமனை தமிழீழம்
