காதலியின் தொலைபேசியின் அழைப்பு வேறொருவரின் தொடர்பிலிருந்ததால் மின் இணைப்புகளை இளைஞன் ஒருவன் துண்டித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தியாவின், பீகார் மாநிலத்தில் இளைஞன் ஒருவர் தனது காதலிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்துள்ளார்.

.நீண்ட நேரமான காதலியின் தொலைபேசி அழைப்பு வேறொருவருடன் தொடர்பிலிருந்ததால் கோபமடைந்த காதலன், காதலியின் கிராமத்திற்குச் சென்று மின் இணைப்புகளைத் துண்டித்துள்ளார்.
குறித்த இளைஞன் மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்புகளைத் துண்டிக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகின்றது.