இலங்கையில் புதிய உச்சத்தை எட்டியது தங்க விலை!

இலங்கையின் தங்கச் சந்தையில் இன்று தங்கம் பவுண் ஒன்றின் விலை 15,000 ரூபாயால் அதிரடியாக அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டு சந்தையிலும் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 425,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 393,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 53,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தை நோக்கி நகர்வதே இந்த உலகளாவிய விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும்.

இதன் நேரடித் தாக்கம் இன்று இலங்கையின் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

vijay
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
iran
அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
trump
நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்படும்: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
iran
ஏழு வாரத்திற்கு பின்னர் ஈரானின் வான்பரப்பு பகுதியளவில் மீண்டும் திறப்பு!
batticaloa
மட்டக்களப்பில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தாய் உயிரிழப்பு!
Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!