மருத்துவர்கள், சட்டத்தரணிகளின் வாகன அடையாள சின்னங்கள் தொடர்பில் அரசின் முடிவு!

அரச மருத்துவர்கள் மற்றும் சட்டத்தரணிகளின் வாகன அனுமதிச் சீட்டுகளை (Vehicle Passes) நீக்குவதற்கு அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மருத்துவர்கள் சிரமமின்றி வைத்தியசாலைக்குள் நுழைய இது உதவும் என்பதால், மருத்துவர்களின் வாகன அனுமதிச் சீட்டுகள் முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.

“மருத்துவர்களின் வாகன அனுமதிச் சீட்டு அவசர காலங்களில் மட்டுமல்ல, சாதாரண கடமைகளுக்காக வைத்தியசாலைக்குள் நுழையும் போதும் முக்கியமானது.

வைத்தியசாலைக்குள் நுழையும் பல வாகனங்களில் மருத்துவர்களின் வாகனங்களை வைத்தியசாலை பாதுகாப்பு ஊழியர்களால் அடையாளம் காண முடியாது. இந்த அனுமதிச் சீட்டுகள் மூலம் அவர்கள் இலகுவாக அவ்வாறு அடையாளம் காணலாம்” என்று அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மருத்துவர்கள் மற்றும் சட்டத்தரணிகளின் வாகன அனுமதிச் சீட்டுகளை நீக்குவது குறித்து காவல்துறையோ அல்லது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களமோ எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sabarimala Ayyappa
விலை அதிகரிப்பால் கோவிலில் மாயமான தங்கம்!
Manusha-nanayakara
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரர் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்னிலை!
Ishara-Sewwandi
இன்று மாலை தாயகம் திரும்பும் செவ்வந்தி! அழைத்துவர இலங்கை STF அதிகாரிகள் பயணம்!
Ishara
இஷாரா செவ்வந்தியின் நேபாள பயணம்! வெளியான அதிர்ச்சி பின்னணி
Uday Kumar Woodler
அரசாங்கத்தின் வசமாகியுள்ள மூவாயிரம் கோடி ரூபா மதிப்புள்ள பாதாள உலக சொத்துக்கள்
three wheel race
முச்சக்கரவண்டி ஓட்ட பந்தயம் : 11 பேர் கைது!