வீடொன்றில் புதைக்கப்பட்ட மனித கால்! தென்னிலங்கையில் பரபரப்பு சம்பவம்!

தென்னிலங்கையில் வீடொன்றின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரின் உடற்பாகம் (மனித கால்) ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை , வலஸ்முல்ல பகுதியிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த மனித கால் பொலிசாரினால் நேற்று (16.07.2025) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனித கால், இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன 51 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையின் உடற்பாகமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த நபர் கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்புறத்தில் புதைத்திருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காணாமல் போன நபரின் உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, அவரின் வீட்டின் பின்பகுதியில் பொலிசார் தேடுதல் நடத்தியிருந்தனர்.

கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கணவனுக்கும், அவரின் மனைவிக்கும் அடிக்கடி மோதல் நிலைமை ஏற்படுத்தாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sabarimala Ayyappa
விலை அதிகரிப்பால் கோவிலில் மாயமான தங்கம்!
Manusha-nanayakara
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரர் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்னிலை!
Ishara-Sewwandi
இன்று மாலை தாயகம் திரும்பும் செவ்வந்தி! அழைத்துவர இலங்கை STF அதிகாரிகள் பயணம்!
Ishara
இஷாரா செவ்வந்தியின் நேபாள பயணம்! வெளியான அதிர்ச்சி பின்னணி
Uday Kumar Woodler
அரசாங்கத்தின் வசமாகியுள்ள மூவாயிரம் கோடி ரூபா மதிப்புள்ள பாதாள உலக சொத்துக்கள்
three wheel race
முச்சக்கரவண்டி ஓட்ட பந்தயம் : 11 பேர் கைது!