இந்திய – இலங்கை பிரதமர்கள் சந்திப்பு!

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புது டெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

கல்வி, பெண்கள் அதிகாரம், புத்தாக்கம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, மற்றும் மீனவர்களின் நலன் ஆகிய முக்கிய துறைகளில் கவனம் செலுத்திப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்தத் துறைகள் நீடித்த வளர்ச்சி மற்றும் பரஸ்பர முன்னேற்றத்திற்கு முக்கியமானவை என்று இரு தரப்பினரும் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு அண்டை நாடுகளுக்கும் இடையே வலுவான மற்றும் நீடித்த உறவுகள், தங்கள் நாட்டு மக்களின் மற்றும் பரந்த தெற்காசிய பிராந்தியத்தின் செழிப்புக்கு முக்கியப் பங்கு வகிப்பதை அங்கீகரித்து, பல முனைகளிலும் ஒத்துழைப்பை ஆழப்படுத்த இரு பிரதமர்களும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு