கைதியின் வங்கி அட்டையின் ஊடாக பணம் திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

கொஸ்கொட பகுதியில் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒருவரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி, 6 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொஸ்கொட பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர், கைதான நபரின் வங்கி அட்டையிலிருந்து மோசடி செய்த பணத்தைக் கொண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றையும், பல்பொருள் அங்காடி ஒன்றிலிருந்து பல்வேறு பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு மேலும் சில சந்தேக நபர்களைக் கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran
ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை துப்பாக்கிச் சூடு!
Suresh Saleh
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்!
iran
தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும்: அமெரிக்காவிற்கு ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை
suriya movie shoot
கொழும்பில் படமாக்கப்படவிருந்த இந்தியத் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை கலைஞர் திடீரென உயிரிழப்பு!
MT Tifani
இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் ஈரான் ஆதரவு கப்பல் இடைமறிப்பு: அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை!
vavuniya
வவுனியாவில் இளைஞர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட குழு: பொலிசார் தீவிர விசாரணை!