காசாவில் தண்ணீர் சேகரிக்க சென்ற 20 குழந்தைகள் ஏவுகணை பலி; தொழில்நுட்ப தவறு எனக்கூறிய இஸ்ரேல்!

காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், தொழில்நுட்ப தவறு தான் காரணம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை விளக்கம் அளித்துள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் இடையே 2023 அக்டோபரில் போர் துவங்கியது.

இந்நிலையில் 21 மாதங்களாக நடந்து வரும் போரில், காசா பகுதியில் 58 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் காசா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பொறுப்பை, காசா மனிதாபிமான அறக்கட்டளையிடம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வழங்கியுள்ளன. இங்கு நாளொன்றுக்கு 5 சரக்கு லாரிகளில் நிவாரண பொருட்கள் வருகின்றன. அவற்றை பெறுவதற்கு தினமும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

A boy leans over the body of his cousin after he was killed in an Israeli strike that hit Nuseirat in central Gaza on July 13. Eyad Baba/AFP/Getty Images
A boy leans over the body of his cousin after he was killed in an Israeli strike that hit Nuseirat in central Gaza on July 13. Eyad Baba/AFP/Getty Images

இதனிடையே காசாவில் உதவி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நுசைரத் அகதிகள் முகாமில் தண்ணீர் விநியோக இடத்தில் இஸ்ரேல் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் சந்தை மற்றும் தண்ணீர் விநியோக இடத்தில் இருந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதாகக் கூறிய இஸ்ரேல் ராணுவம், தற்போது இது குறித்து விசாரித்து வருகிறோம் என விளக்கம் அளித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் அதிகாரி!
school boy death
தலைநகரில் பிரபல பாடசாலை மாணவன் உயிரிழப்பு பிரதி அதிபர் உட்பட 7 பேர் கைது!
jaffna
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு!
northern province
வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
power cut
மீண்டும் நாட்டில் மின்வெட்டு ஏற்படும் அபாயம்?
airport
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!