திருகோணமலையில் கைதான பிக்குகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்!

திருகோணமலை போதிராஜாராமையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை குறித்து, கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமசிறி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் கலாநிதி இத்தேபான தம்மாலங்கார ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பிக்குகள் உள்ளிட்ட 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டமை குறித்து தமது கவலையைத் தெரிவிப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டைய மன்னர்களால் உயிரைக் கொடுத்தும் பாதுகாக்கப்பட்ட மற்றும் சாசனத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த புண்ணிய பூமியிலேயே பிக்குகள் புத்தர் சிலையை நிறுவியதாகவும், அவர்கள் சிலையை வைக்கச் சென்றதற்காகவே தாக்குதலுக்கு உள்ளானார்களே தவிர வேறு எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சாதாரண சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சாத்தியமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, சாசனத்திற்கு எதிராகத் திட்டமிட்டு இழைக்கப்பட்ட ஒரு பெரும் குற்றம் எனத் தாம் நம்புவதாகவும் அக்கடிதத்தில் மகாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, குறித்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இக்கடிதத்தின் ஊடாக அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!