வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்த வேன் : பலர் படுகாயம்!

மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா சுற்றுவட்டத்தில் உள்ள டெஸ்போட் வட்ட பகுதியில் இன்று (10) அதிகாலை 5:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வானில் பயணித்த எட்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை டெஸ்போட் பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களும் உள்ளூர்வாசிகளும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

வானின் சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தில் வான் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

semmani
செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதிகோரி மதுரையில் வெடித்த போராட்டம்!
hief
நவாலியில் களவாடப்பட்ட ஐம்பொன் விக்கிரகம்!
77e98751-ec05-4949-8ca7-d07aa8aec61b
முள்ளிவாய்க்காலில் தேர் திருவிழாவுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!
New Project t (3)
குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட வர்த்தகரின் உடல்: நடந்தது என்ன?
IMG_5048
பாடசாலை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லை: போராட்டத்தில் குதித்த பாடசாலை மாணவன்!
news
மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன்!