வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்த வேன் : பலர் படுகாயம்!

மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா சுற்றுவட்டத்தில் உள்ள டெஸ்போட் வட்ட பகுதியில் இன்று (10) அதிகாலை 5:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வானில் பயணித்த எட்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை டெஸ்போட் பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களும் உள்ளூர்வாசிகளும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

வானின் சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தில் வான் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (6)
யாழில் நீர் குழாய் புதைத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
New Project t (4)
முத்தையன்கட்டு குடும்பஸ்தரின் மரணம்: 4 இராணுவத்தினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
New Project t (3)
தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் வெளிநாட்டவர்கள் பெரும் பாதிப்பு!
New Project t (1)
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் வீட்டுக்கு முன்னால் திரண்ட பொதுமக்கள்!
New Project t
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
New Project t (11)
“தமிழ்ல பேசு அம்மா” ஆங்கிலத்தில் பேசிய தாயிடம் அழுது புலம்பிய மகன்!