தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை குற்றவாளிகள்: தனுஷ்கோடியில் மரைன் பொலிஸ் அதிரடி!

தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் சட்ட விரோதமான முறையில் ஊடுருவிய இலங்கையர்கள் இருவரை இராமேஸ்வரம் மரைன் பொலிசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று(24.07.2026) அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் – மரைன் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்குச் சென்று பார்த்த போது இலங்கையைச் சேர்ந்த இருவர் வந்திருந்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த மரைன் பொலிசார் இராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை – வட்டாலை பகுதியைச் சேர்ந்த லூசிநந்த்(30) மற்றும் கம்பஹா பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன்(31) ஆகியோர் என மரைன் பொலிசார் நடத்திய முதல் கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

மேலும், இவர்கள் இருவரும் நேற்று(23) இரவு மன்னார் – பேசாலை கடற்கரையில் இருந்து 3 இலட்ச ரூபா பணம் கொடுத்து படகு ஒன்றில் புறப்பட்டு இன்று(24) அதிகாலை சுமார் 4 மணி அளவில் தனுஷ்கோடி – கம்பிப்பாடு கடற்கரையில் வந்து இறங்கியதாக தெரிவித்துள்ளனர்.

இந்த இருவர் குறித்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் இலங்கையில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர்கள் இருவர் மீதும் போதைப் பொருள் கடத்தல் வழக்கு மற்றும் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் பல நிலுவையில் உள்ளதுடன், இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருந்தமையும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி தமிழகம் அல்லது கேரளா மாநிலங்களில் சட்ட விரோதமாக மறைந்திருக்கலாம் என்பதற்காக வந்திருக்கலாம் என தெரிய வந்தன் அடிப்படையில் தொடர்ந்து இவர்களிடம் மத்திய மாநில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக தமிழகத்திற்கு நுழைந்ததன் அடிப்படையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதுடன் இவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு வழக்குகள் இலங்கை நிலுவையில் உள்ளதால் இவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
அராலியில் நள்ளிரவில் துணிகரக் கொள்ளை: மின்சாரத் தடையைப் பயன்படுத்தி தங்க நகைகள் கொள்ளை!
Tran Alus
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து: டிரான் அலஸ் மீது விடுக்கப்பட்டுள்ள பாரிய ஊழல் குற்றச்சாட்டு
Akila Viraj Kariyawasam
கைது செய்யப்பட்ட அகில விராஜ் ஆகஸ்ட் 18 வரை விளக்கமறியல்!
Akila Viraj Kariyawasam
ஜனாதிபதி செயலக ஊழியர் நியமன முறைக்கேடு: முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!
Kaduwela bus  attack
கடுவெலையில் சொகுசுப் பேருந்துக்குத் தீவைத்த மர்ம நபர்கள்: ஓட்டுநர், நடத்துனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
Nirojan Kulasingam
சமையல் உலகின் 'ஆஸ்கார்' பட்டியலில் முதல் ஈழத்தமிழர்: பாரிஸில் நிரோஜன் குலசிங்கம் மகுடம்!