யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுமி 17 நாட்களின் பின் மீட்பு: ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியொருவரை விடுதி ஒன்றில் 17 நாட்கள் தடுத்து வைத்து , துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கடந்த 17 நாட்களுக்கு முன்னர் சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வந்த நிலையில் , சிறுமி நல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார் எனும் தகவல் கிடைத்து , அங்கு விரைந்த பொலிஸார் சிறுமியை மீட்டு , ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டதுடன் , வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

ஆரம்ப கட்ட விசாரணையில் ,சிறுமியை இளைஞன் ஒருவர் காதலித்து வந்ததாகவும் , அவரே சிறுமியை வீட்டில் இருந்து அழைத்து வந்து 17 நாட்களும் விடுதியில் தங்கி இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

அதேவேளை , விடுதியின் உரிமையாளரும் , சிறுமியுடன் தவறாக நடந்து கொண்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிறுமியின் காதலன் என கூறப்படும் இளைஞனை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (6)
யாழில் நீர் குழாய் புதைத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
New Project t (4)
முத்தையன்கட்டு குடும்பஸ்தரின் மரணம்: 4 இராணுவத்தினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
New Project t (3)
தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் வெளிநாட்டவர்கள் பெரும் பாதிப்பு!
New Project t (1)
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் வீட்டுக்கு முன்னால் திரண்ட பொதுமக்கள்!
New Project t
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
New Project t (11)
“தமிழ்ல பேசு அம்மா” ஆங்கிலத்தில் பேசிய தாயிடம் அழுது புலம்பிய மகன்!