நயினாதீவில் அதிபர் கடலில் விழுந்து பலியான விபத்து: படகோட்டி விளக்கமறியலில்!

படகில் பயணிக்கும் போது, கடலில் தவறி விழுந்து நயினாதீவு அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைதான படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நயினாதீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி, நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை படகில் பயணித்துக்கொண்டிருந்த வேளை கடற்சீற்றம் காரணமாக படகில் இருந்து கடலில் தவறி விழுந்து நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியால அதிபரான நடராசா மயூரன் (வயது 48) என்பவர் உயிரிழந்துள்ளார்

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் படகோட்டியை கைது செய்து , விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், ஊர்காவற்துறை நீதாவன் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது, படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

covid 19
மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
Ragitha Rajapaksa
விஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!
jaffna kings
விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!
ramanathan archchuna
அருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு - ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!
archchcuna
கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?
Former IGP C.D
ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!