பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா? பாகிஸ்தான் கடற்படை விளக்கம்

இலங்கைக்கு காலாவதியான பொருட்கள் வழங்கியதாக பரவும் செய்தியை பாகிஸ்தான் கடற்படை மறுத்துள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களில் காலாவதியான உணவுப்பொருட்கள் இருந்தன என சமூக வலைதளங்களில் பரவிய செய்தி பொய்யானது என பாகிஸ்தான் கடற்படை அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தியுள்ளது.

இவ்வாறு சமூக ஊடகங்களி்ல் பரப்பிய பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பாகிஸ்தான் கடற்படை,

பேரிடர் நிவாரணப் பொருட்கள் நிரப்பப்பட்டிருந்த பைகள், உணவுப் பொருட்களுக்கானவை அல்ல, அவை ஏற்கனவே பாகிஸ்தான் கடற்படை பயிற்சி கப்பலில் இருந்த பழைய பைகள், இலங்கைக்கு அவசரமாக உதவி அனுப்ப வேண்டியிருந்ததால், அந்த பைகள் விரைவாக கொண்டுசெல்லும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன. பைகளுக்குள் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் புதியதும், காலாவதி நிறைவடையாதவையும் ஆகும்.

“இலங்கை மக்களுக்கு உதவுவதில் நாம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம். பொய்யான தகவல்கள் மற்றும் பிரசாரங்களுக்கு எவரும் உள்ளாக வேண்டாம்.” டித்வா புயல் காரணமாக இலங்கையில் மிகப்பெரிய நிவாரண தேவை நிலவுகின்ற நிலையில், சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களால் மீட்பு முயற்சியை திசைதிருப்பக் கூடாது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு