நீல நிற முட்டையிட்ட கோழி: ஆச்சரியத்தில் மக்கள்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கோழி ஒன்று நீல நிற முட்டையிட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் தாவனகெரேயில், சன்னகிரி – நல்லூர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது

தனது வாழ்வாதாரத்திற்காக கோழிகளை வளர்க்கும் நூர் என்பவரின் வீட்டில் கோழி ஒன்று மற்ற கோழிகளைப் போலல்லாமல் நீல நிற முட்டையை இட்டுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கால்நடைத்துறை உதவி இயக்குநர் வைத்தியர் அசோக் கூறுகையில், “கோழியின் கணையத்தில் உள்ள ‘பிலிவர்டின்’ (biliverdin) என்ற நிறமி காரணமாக முட்டை நீல நிறத்தில் மாறியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது ஒரு அரிய நிகழ்வு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீல நிற முட்டை இட்ட அந்தக் கோழியை ஆய்வுக்காக எடுத்துச்செல்லத் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு