நீல நிற முட்டையிட்ட கோழி: ஆச்சரியத்தில் மக்கள்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கோழி ஒன்று நீல நிற முட்டையிட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் தாவனகெரேயில், சன்னகிரி – நல்லூர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது

தனது வாழ்வாதாரத்திற்காக கோழிகளை வளர்க்கும் நூர் என்பவரின் வீட்டில் கோழி ஒன்று மற்ற கோழிகளைப் போலல்லாமல் நீல நிற முட்டையை இட்டுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கால்நடைத்துறை உதவி இயக்குநர் வைத்தியர் அசோக் கூறுகையில், “கோழியின் கணையத்தில் உள்ள ‘பிலிவர்டின்’ (biliverdin) என்ற நிறமி காரணமாக முட்டை நீல நிறத்தில் மாறியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது ஒரு அரிய நிகழ்வு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீல நிற முட்டை இட்ட அந்தக் கோழியை ஆய்வுக்காக எடுத்துச்செல்லத் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் அதிகாரி!
school boy death
தலைநகரில் பிரபல பாடசாலை மாணவன் உயிரிழப்பு பிரதி அதிபர் உட்பட 7 பேர் கைது!
jaffna
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு!
northern province
வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
power cut
மீண்டும் நாட்டில் மின்வெட்டு ஏற்படும் அபாயம்?
airport
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!