சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தெரியும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (09) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.