பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற நிறுவனங்களை மூட ஜனாதிபதி உத்தரவு!

பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஒரே அமைச்சின் கீழ் அல்லது வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் ஒரே நோக்கத்திலான பல்வேறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

இலங்கை உரக் கூட்டுத்தாபனம் செயற்பாட்டில் இருக்கத்தக்கதாக எப்பாவல பொஸ்பேட் நிறுவனம் உருவாக்கப்பட்டமை அதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பல்வேறு நோக்கங்கள் மற்றும் தேவைகளுக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட அவ்வாறான நிறுவனங்களைத் தொடர்ந்து பராமரிப்பதால், அரசாங்கம் கூடுதல் செலவுச் சுமையை ஏற்க வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் மூடுவதற்கான செயற்பாடுகளை விரைவாக முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் ஒரே செயற்பாட்டிற்கான பல நிறுவனங்கள் இருப்பதால், திட்டங்களைச் செயல்படுத்துவதில் செயல்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

srilanka weather
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி: 6-ஆம் திகதிக்குப் பின் மீண்டும் கனமழை எச்சரிக்கை!
gotabaya rajapaksa
கோட்டாபயவின் மனு பரிசீலனை நிறைவு: தீர்ப்பு செப்டெம்பர் 22-க்கு ஒத்திவைப்பு!
electricity bill
மின் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
mahaweli river
அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை: பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு!
Mahara Prison
போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம்? மஹர சிறைச்சாலையில் ரூ.15 கோடி சேதம் — அதிர்ச்சி தகவல்கள்!
Pujith Jayasundara
"அரசியல்வாதிகளை நம்பினால் பூஜித்திற்கு நடந்ததே நடக்கும்": பொலிஸ் உயர்மட்ட 'வாட்ஸ்அப்' உரையாடலில் வெளிவந்த தகவல்!